விரல்கள்

விரல்களில் ஒட்டியிருக்கும்

விடுபட்டுப்போன வண்ணத்துப்பூச்சியின்

நிறத்துகள்களை,

தாழ்ந்த மரக்கிளையில்

தடவுகிற சிறுவனின் தலையில் 

பூக்களை உதிர்க்கிறது மரம்.

தட்டிவிடுகிற அவன் விரல்களில்

மகரந்தத்துகள்கள்.!





Post a Comment

0 Comments