
கும்பமுனி என்னும் கதா பத்திரத்தின் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறார், சிறுகதை என்ற போர்வையில். ஒரு சிலருக்காவது உறைத்திருக்குமோ என்னவோ? சீப்பு இலவசமாக கிடைத்தாலும், முண்டியடித்துக்கொண்டு வாங்க செல்பவர்கள் என்று மக்களை குறை சொல்லும் இடத்தில், இவரின் பாரபட்சமற்ற எழுத்துக்கள், சாட்டையடி கொடுக்கிறது.
மேலதிகாரிக்கு குப்பை தொட்டியில் பிஸ்கட் எடுத்துக்கொடுப்பதும், கேட்பாரற்று இருக்கும் தியாகி எம்.ஜி.இராமச்சந்திரன் சிலையை கருப்பொருள் ஆக்கியிருப்பதும், மனதை பிசைகிறது.
காடுகளில் இருக்கும் மரங்களை பற்றி எழுதும்போது குறிப்பிடுகிறார்: "இறைவன் உறையும் பெரு மரத்தண்டுகள்". இந்த புத்தகத்தில் என்னை அதிகம் கவர்ந்த வரிகள் இவை தான். இதற்காகவே சாகித்ய அகாதமி கொடுக்கலாம்.
0 Comments